தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கடிதம்

என் கனவு பதிவிற்காக அடுத்த கட்ட அறிவார்ந்த வேளைகளில் ஈடுபடுகிறேன் ..,எங்கள் அண்ணன் தன்மானசிங்கம் பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த வேலைகளின் ஆரம்ப கட்ட பணிகள் ஆய்வில் உள்ளது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் ...,இன்னும் இரண்டு நாட்களில் என் பதிவு அம்பலம் ஏறும் என்று சொல்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ..,அதுக்குள்ள என்னக்கு மாலை போட்டு பாடையில எத்திராதீங்க சாமிகளா !!!

இப்படிக்கு

பதிவுலக மாமேதை பனங்காட்டுநரி

சனி, 16 அக்டோபர், 2010

எதிர் தாக்குதல் - தன்னம்பிக்கை

ஒரு வாரமா சந்தோஷமா இருக்கேன் .எதுக்கு சந்தோஷமா இருக்கேன்னு கேட்டீங்கன உங்க வீட்ல பாயசம் வைச்சு பக்கத்துக்கு வீட்ல எல்லோருக்கும் குடுப்பீங்க ..,ஆமாங்க என்னோட போன பதிவுக்கு மட்டும் மொத்தம் 45646 கமெண்ட் வந்திருக்கு அப்படியே இன்ட்லில என்னோட பதிவ பாராட்டி மெயில் அனுப்பிசிருகாங்க ..,கூடவே நேத்து ஒரு பிளான்க் செக் , சிக்நேச்சர் கூட இல்லாம அனுபிச்சு பாராட்டியிருக்காங்க
தமிழ் நாட்டு நியூஸ் பேப்பர் எல்லாம் என்னோட பேட்டிக்கு காத்துண்டு இருக்கு .நேத்து என்னக்கு பாராட்டு விழா நடத்துறதுக்கு தேதி கேட்டு போயிருக்காங்க ..,நானும் டெல்லி ல ஒரு மீட்டிங் இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லி அனுப்பிசிடேன் .இன்னிக்கு காலையிலே ஷாருக்கான் என்னோட அடுத்த படத்துல நீங்க தான் சார் ஹீரோவா நடிக்கணும் நான் செகண்ட் ஹீரோவா வந்துடுறேன் சொல்லி ரொம்ப அடம்பிடுச்சாறு ...,சரி டேட் பிக்ஸ் பண்ணி சொல்றேன் சொல்லி அனுபிச்சிடேன்..,ஆனா அவரு கண்ணிமாராவுல ரூம் போட்டு டேட் வாங்கி தான் மும்பை போவேன்னு இருக்கிறாம் ..,ரஜினி என்னை ரோபோ பார்ட் 2 வுல நடிக்க சிபாரிசு செய்ஞ்சு இருக்குராரம் ஷங்கர் கிட்ட ...., ஆனா
*
*
*
*
இந்த மேட்டர் எல்லாம் தெரிஞ்ச சிரிப்பு போலிசு என்னை மனதளவில பாதிக்க படுற கமெண்ட் போட்டு என் வளர்ச்சியை தடுக்க பார்க்குது ..,

ஆனா நாங்க யாரு வீட்ல செய்ஞ்ச மைசூர்பாக்க குக்கர்ல ரெண்டு விசில் விட்டு தின்னவங்க நாங்க ( அம்மா அடிக்காதீங்க )..,அவ்ளோ உஷாரா இருப்போம் ...,யோவ் சிரிப்பு போலிசு உன்னோட பாச்சா எல்லாம் பலிக்காதுயா ...,என்னோட தங்க தளபதி டெர்ரர்..., தீக்குளிக்க தயார் தலைவா நீ ஊ ன்னு சொல்லு அந்த ரமேஷ இல்ல நானா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்னு சொல்லிட்டு எண்ணெய் தேச்சு குளிக்க போயிருக்கான்.என்னை எதிர் பதிவு திலகம்னு மத்திய அரசு ஒரு விருது கொடுக்குது ...,நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ..ஏன் தெரியுமா இங்க விருத திருடுற பன்னாடைங்க ஜாஸ்தி ..,அதான் அப்புறமா என்னோட ஷெட்டுலே பார்த்துட்டு வாங்க வரேன்னு லெட்டர்பாட்ல ஜனாதிபதிக்கு அனுபிச்சிடேன்

ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,

டிஸ்கி : அந்த இன்ட்லி மெயில் பார்க்கணுமின நீங்க என்னோட மெயில் ID க்கு வாங்க ..,மெயில் id : பணங்கட்டுநரி@ஜிமெயில்.காம் ..,பாஸ் வோர்ட் : அகாரா புக்காரா ..,.

வியாழன், 14 அக்டோபர், 2010

சினிமா புதிர் போட்டி

இதோ பாருங்க மக்களே ...,இதுக்கு நான் காரணமே இல்ல ..,எல்லாம் இந்த ,பதிவு போட்டு என்னை டரியல் ஆக்கிட்டாங்க ...,என்னால இவங்க மாதிரி கிராபிக்ஸ் வொர்க் பண்ண முடியாது ( தெரியாது ) ...,சரி எதுனா வரலாற்று கேள்வி கேக்கலாம்னு பார்த்தா நான் என்ன செய்ஞ்சு கேள்வி கேட்போனோ (கூகிள் ஆத்தா ) அதே மாதிரி நீங்களும் கூகிள் ஆத்தா கிட்டே கேட்டு பதில் சொல்லிடுவீங்க ...,அதுனால என்னக்கு ரொம்ப பிடிச்ச படத்தோட ஸ்டில் போட்டிருகேன் ...,தக்காளி கண்டு புடியுங்க ..,கண்டுபிடிசிட்டீங்கான டெர்ரர் ப்ளாக் பாஸ்வோர்ட்...,அண்ட் USER நேம் பரிசாக அளிக்கப்படும் ...,

01.


இது ஒரு ஆங்கில படம் ..., Anthony Burgess
எழுதின நாவல் தான் இந்த படம்

02.
இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் தான் ...,இந்த படத்தில சவுண்ட் ட்ராக் Great Mass in C Minor, No.16 (K.427) - அக்னஸ் ..., நம்ம மொசார்ட் அண்ணன் சிம்போனி தான் உபயோக படுத்தியிருபாங்க...,க்ளாஸ் மூவி

03.

ஹா ஹா ..,கண்டு புடிச்சிடுவீங்க...,மனிதத்தை பற்றி பேசுகிறவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்திருப்பார்கள் ....,சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் ...,

04.

நம்ம பாரதிராஜா எடுத்த பொம்மலாட்டம் ,கல்லுக்குள் ஈரம் போன்ற படத்தை பார்த்திருப்பீர்கள் ...,அதே மாதிரி தான் ...,பட் இந்த படம் மாஸ்டர் பீஸ்

05.
இந்த படத்துல ஒரு வசனம் வரும் ...,Life is a box of chocolates,. You never know what you're gonna get. இந்த வசனத்தை கேட்டால் ஆயிரம் டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட்ட மாதிரி இருக்கும்

06.

இந்த படம் உண்மை சம்பவத்தை வைத்து படமாக்கப்பட்டது .., ஒரு இனத்தையே அழித்த நாஜி படையினரது அராஜகங்களையும் ,மனித உரிமை மீறல்களையும் அப்பட்டமாக படமாக்கப்பட்டது...,



கண்டு புடியுங்க பார்க்கலாம் !!!!!!!!

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?

நண்பர்களே நேற்று சந்தோஷ்பக்கங்கள் இந்த பதிவை போட்டு இருந்தார் , "இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க" அப்படின்னு கேட்டு இருந்தார் , ரொம்ப நல்ல விஷயம் எனவே நண்பர்களே உங்களால் முடிந்த அளவுக்கு அனைவரும் குறைந்த பட்சம் ஒரே ஒரு நாளாவது உங்கள் பிளாக்கில் இந்த பதிவை போடுங்க நிறைய பேருக்கு ரீச் ஆகும் . விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்த தொடர்பதிவை தொடரலாம் .

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா?

CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை கொடுத்து யாருக்கேனும் உதவ விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)
உள்ள Excel Formஜ நிரப்புங்கள். தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்...!

இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

(நன்றி :சந்தோஷ்பக்கங்கள், மங்குனி அமைச்சர் பன்னிகுட்டி ராம்சாமி

)

இத்தகவலை மேலும் பகிர்பவர்களுக்கும், உதவுபவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

புதன், 29 செப்டம்பர், 2010

பூம் பூம் பூம் ரோபோட ....,




டிஸ்கி 01 : நாட்ல வெல்லாமை எந்திரனால தான் சரியாய் விலைல ,லூயிஸ் பனுவல் ,விட்டோரியா டி சிக்கா,போன்ற டைரக்டர் படம் எந்திரனலதான் தடை படுது சொல்றவங்க தயவு செய்து ஒன் ஸ்டேப் பேக் போய் வேற ப்ளாக் படிங்க ...,மீறி படிச்சிட்டு புடிக்கலைன்ன மைனஸ் வோட்டு போட்டுட்டு போய்டுங்க ...,படிக்காதீங்க .




ரஜினி ....,இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர் .நான் இவருக்கு மிக பெரிய ரசிகனானது என்னுடைய 7 வது வயதில் .எங்கள் ஊர் டென்ட் கொட்டாயில் (தியேட்டர் பேரு வேந்தர் ) இவர் படம் பாயும் புலி படம் பார்த்தேன் ..யப்பா.., அந்த படத்துல வந்த சண்டையும் ,ஸ்டைலும் ரொம்ப புடிச்சிது .ரெண்டு நாள்ல மறந்து போச்சி .அப்புறம் இன்னொரு படம் பார்த்தேன் .....,யப்பா சாமி இன்னா ஸ்டைல் ,இன்னா நடை ,இன்னா மேனரிசம் ..,சொக்கி போய்ட்டேன்..படம் பேரு மூன்று முகம் .அந்த படத்துல வர்ற அலெக்ஸ் பாண்டியனை இப்பவும் நினைச்சிகிட்டனா ஒரு பிரெஷ்நெஸ் வரும் .அது தான் ரஜினி .

ஜானி படத்துல ஒரு பாட்டு சீன் ..,அதுல போர்வையை போட்டுகிட்டு தலையை சாச்சிட்டு ஒரு லுக் விடுவார் பாருங்க ...,ஹையோ சாமீ 10 டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட எபெக்ட் வரும் .இந்த மாதிரி வேற எந்த நடிகரும் என்னக்கு மகிழ்ச்சியையோ ,சந்தோஷத்தையோ கொடுக்க வில்லை .இப்போ கூட அந்த வயசுக்கே போன மாதிரி ஒரு பீலிங் .இது ரஜினியால் மட்டும் முடியும் ..இன்னொருத்தன் பொறந்து வந்தாலும் இந்த அளவுக்கு மாஸ் இருக்குமான்னு சந்தேகம் தான்.




34 வருஷம் அவர் உழைத்த உழைப்பு (அது தனித்துவமானது ) தான் அவரை இன்று யாருமே எட்ட முடியாத அளவு மலை உச்சியில் வைத்துள்ளது .அந்த மனிதனின் இயல்பான நடிப்புக்கு நான் என்றுமே ரசிகன் ...,முள்ளும் மலரும் ,ஜானி ,புவனா ஒரு கேள்விகுறி ,தப்பு தாளங்கள் ,தில்லு முள்ளு ,போன்ற எண்ணற்ற படங்களும் ,,,...,ஸ்டைலுக்கு ஹா ஹா ஹா ...,எல்லா படங்களும்.தான்....,குறிப்பா ,ராஜாதி ராஜா ,பாட்ஷா (யப்பா இந்த பட பேர டைப் பண்ணும் போதே ஒரு புத்துணர்ச்சி ) ,பில்லா, மாப்பிள்ளை ,முத்து ,படையப்பா .... இந்த படையப்பா பத்தி ஒரு விஷயம் ,இந்த படத்துல தலைவர் ஒரு காட்சியல துண்ட தூக்கி போட்டு ஊஞ்சல்ல உக்காருவாரு பாருங்க ...,நாங்க எல்லாம் விசிலடிக்றோம் என் நண்பன் மட்டும் எழுந்து நின்னு ,தலைவா தலைவான்னு அழுவுறான்
இப்போ அவன் ஒரு MNC ல சீனியர் மேனேஜர் ...., படம் பாக்கிறதுக்கு நாளைக்கு வர்றான்.


எந்திரன் நாளைக்கே நைட் ஷோ ஆரம்பிக்குது . இப்போ அந்த பழைய சந்தோசம் வந்தாச்சு ...,எங்க ஏரியா பூரா விழாகோலம் தான் ..,ஒவ்வொருத்தன் முகத்திலும் அவ்ளோவு சந்தோசம் ...,எந்திரன் ஆட்டம் ஆரம்பிச்சாச்சு ....,இனிமே பும் பூம் பூம் பூம் ..ரோபோட ...,ரோபோட ...,

டிஸ்கி 02 : இங்க என்னை சந்தோஷபடுத்தின ஒருவரை பத்தி போட்டிருக்கேன் .., கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க ..,

திங்கள், 27 செப்டம்பர், 2010

குவார்ட்டர் - கட்டிங் - டெர்ரர் -பாண்டி

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் குவார்ட்டர் பாட்டில்லை ராவாக அடித்து விட்டு தலை வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் தொண்டை குழியிலிருந்து
வயிற்றின் மைய பகுதி வரை ஒரு எரிச்சல் எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன்.உடனே ஒரு சொம்பு தண்ணீர் குடித்து
விட்டு படுத்து விடுவேன்.என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி அப்போழ்துதான் எழும் ..,மேலும் சம்மட்டியால் அடிக்கும் .உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்விஎதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது...அதனால் மறுபடியும் ஒரு குவாட்டர் அடித்து விடுவேன் ..,

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் காலி பாட்டில்களும் ,வாட்டர் பாக்கெட் கவர்களும் தான்.எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் அதிகரித்தது.ஆனால் உள் எறியும் தீயின் வேகம் குறைந்ததது . அந்த போதையிலே எழுந்தேன் ...,மணி பார்த்தேன் 9 .55 p .m ஓடினேன் ,ஓடினேன் ..

கடை சாத்திவிட்டர்கள்....,


கடைகள் பல மாறி சரக்கை தேடினேன். சரக்கு கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் அதிகரித்தது.மனம் தேடலை அதிகரித்தது சரக்குவெள்ளத்தில் ஆக்ரோஷமாக நீந்தி கொண்டு இருந்தது. முயற்சியை சற்றும் கைவிட முடியாமல் தேடினேன் .

ஆ.... அதோ ஒருவன் தன்னதனியாக நிற்கிறான் ..,இருக்கிறதா கேட்டேன் ...இருக்கு ஆனால் 100 ருபாய் என்றான் .சரி தா என்று வாங்கி விட்டேன். இனி கவலை இல்லை கவலை இல்லாமல் சரக்கு அடிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில்......,எனக்குள் எதோ ஒரு மாற்றம். எதோ ஒன்றை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.யோசித்தேன் .

ஆங் ..சைடு டிஷ் வாங்க மறந்து விட்டேன் ..,அது தான் என்னுள் மாற்றத்தை உண்டு பண்ணியது ..,வாங்கினேன் ...,(ஊறுகாய் ).பாட்டிலை திறந்தேன் .அந்த பொன்னிற வேர்வையை (சரக்கு தான் பாஸ் )சிறிது தண்ணி ஊற்றி பருகினேன் அது தொண்டை குழியை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பாய் பாய்கிறது.போதையில் படுத்து விட்டேன் .காலையில் எழுந்தேன் ...,கடிகாரத்தை பார்த்தேன் ...,மணி 9 .45 AM ..,அவசரம் அவசரமாக முகத்தை அலம்பி சரக்கு வாங்கசென்றேன் ...,இதே போல் போதையோடு வாழ்வதற்கு
இயற்கையிடம் என் மனம் இரஞ்சியது


டிஸ்கி : சரக்கு வாங்க கடைசி நிமிடத்தில் போவோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

வியாழன், 2 செப்டம்பர், 2010

டெர்ரர் பாண்டியின் அத்துமீறல் -உலக பதிவர்கள் கவலை

கடந்த சில நாட்களாகவே பதிவுலகில் ஒரு நச்சு பாம்பு சுத்தி வருவதாக பிரபல பதிவர்கள் ஜெய் ,மங்குனி ,அருண் பிரசாத் ,ஜில் தண்ணி போன்ற பதிவர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது .கடமை ,லஞ்சம் ,கண்ணியம் ,மாமுல் ,கட்டுப்பாடு ,ஜொள்ளு,கமெண்ட் மாடரேஷன் என்று நேர்மையாக வாழ்ந்து வரும் நம் சிரிப்பு போலிசு வாங்கின அவார்டை திருடியது ,பனன்காட்டு நரியை பதிவு எழுதவில்லை என்று சொன்னால் வீராசாமி dvd யை அவர் வீட்டுக்கு பார்சல் அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற உட்சபட்ச தாக்குதல் தொடர்கிறது .பதிவுலகில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போயுள்ளது .

ஆம் டெர்ரர் சாதாரண ஆள் இல்லை ..எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவார்கள் ஆனால் இவன் சட்டியையே கவுக்கிற ஆள் ..,இந்த கொடுமையெல்லாம் மேற்கண்ட பதிவர்கள் அனுபவிதிருகிரார்கள் .நேற்று டெர்ரர்இன் உச்ச பட்ச கொடுமை அரங்கேறியுள்ளது ...,ஒரு நல்ல சிறுகதை எழுதி கும்மி அடிக்கும் சங்கத்துக்கு ஆற்றொன்ன துயரை அரேங்கெற்றியுள்ளார் ...அந்த பதிவின் பாதிப்பு இந்த பதிவை எழுத தூண்டியது

இதனால் அறிவிக்கபடுவது என்னவென்றால் மங்குனி செலவில் மேற்சொன்ன பதிவர்கள் அனைவரும் இங்கிருந்து ஷார்ஜா கிளம்பி அவர் வீடு முன்பாக ஆர்பாட்டமும் ,அங்கிருந்து கிளம்பி சென்னை மெரினாவில் தீக்குளிப்பு போராட்டமும் நடத்தப்படும் என்பதை தெர்வித்து கொள்கிறோம் .முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

புதன், 1 செப்டம்பர், 2010

என்னை பாதித்த பதிவர்கள்

நான் கிட்டதட்ட ஓராண்டு காலமாக பதிவுலகத்தில் வாசகனாய் இருந்து ஒரு சிலர் உசுபேத்தி விட்டதால் பதிவு எழுத வந்தேன் .நான் மிக சிலரின் பதிவுகளை மட்டுமே படித்து வந்த தாக்கமோ அல்லது நான் படித்த ஆசிரியர்களின் எழுத்துகளோ என்னால் எழுத முடியவில்லை .எழுத்துக்கள் அவர்களை போல் கோர்வையாகவும் சுவையாகவோ இருக்காது என்பதது மட்டும் வெள்ளிடை மலை .என்னக்கு முதன்முதலில் அறிமுகமானது சாரு நிவேதிதாவின் வலைமனை தான்.பதிவுலகத்தில் என் முதல் கமெண்ட் கிரி ப்ளோகில் தான் போட்டேன் ...எப்படி தமிழில் தட்டச்சு பண்ணுவது என்று அவர் தான் சொல்லி குடுத்தார் ..தேர்ந்த பத்திரிகையாளர் போல எழுதுவார் ..ஊருக்கு வந்து எனக்கு போன் செய்த முதல் பதிவர் அவர்தான் . அதிலிருந்து ஒவ்வருவரை பிடித்தேன்.அதில் வால்பையனும் ,ராஜனும் என்னை நிறைய யோசிக்க வைத்த பதிவர்கள்.

அதிலிருந்து தான் எங்கள் தானை தலைவர் பட்டாபட்டியின் வலைபூ கண்ணில்பட்டது .என்னடா இது பேரே வில்லங்கமா இருக்கேன்னு தான் படித்தேன் .ஆஹா அவருடைய நக்கல் ,நையாண்டியில் நம்முடைய அரசியல் வியாதிகளின் டவுசெரை கிழித்து தொங்க போட்ட பதிவுகளை பார்த்ததும் இதை தான் இவ்வோளவு நாள் மிஸ் பணிடோமே ஒரு பீலிங் .இந்த போஸ்ட் என்னை மிகவும் பாதித்தது ஏனென்றால் அதிலிருந்த டீலிங்கே வித்தியாசமாய் இருந்தது ...,அப்புறம் என்னோட நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினேன் ..யாருடே இந்த ஆளு இவ்வளோ தில்லா எழுதுறான் ...,போன் நம்பர் இருக்கா என்று கேட்கும் அளவுக்கு போய்டிச்சு .இப்போ மனுஷன் இந்தியாவுல தான் இருக்கு ..ஒரு மெயில் கூட காணோம் ..g talk ல invite போடிருகேன் ...வந்ததுன்ன முதல்ல சோனா ஏன் ஆஸ்திரேலியா போனான்னு கேக்கணும்

அடுத்து நம்ம வெளியுரு சைந்தவி பக்கங்கள் படிச்சிட்டு நிஜமாவே அதிலிருந்து என்னால் இன்னும் மீளவே முடியலை.EXCELLENT காதல் கடிதம் அது மிகை படுத்தி சொல்ல வில்லை புல் போதைல அந்த கடிதத்தை படிச்சுட்டு ஒரே பீலிங் சா போச்சு ....,சரி ஒரு லூசுதனமா பின்னூட்டம் போடலாம்னு போட்டா ஒரே வெட்டு ,தலை துண்டா போய்டுச்சி ..இந்நாட மனுஷன் இப்படி கோப படுரரேனு பார்த்த எங்க தலைவர் குலசாமி பட்டா அங்கு அறிவுரை வழங்குச்சு ..இங்கே அருமை ,வாழ்த்துக்கள் என்று பின்னோட்டம் இட்டால் அது வன்முறையாக கருதப்படும் என்று .அப்புறம் தான் தெரிஞ்சுது இது சும்மா ஜாலியா போட்டு தள்ற கோஷ்டி னு...,

நான் நிறைய புனைவுகள் ,கதைகள் ,கட்டுரைகள் ,வாழ்கை வரலாறுகள் படித்திருந்தாலும் சந்தர்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நக்கல் நையாண்டியுடன் எழுத்துகளை எழுத நம்முடைய பட்டாபட்டியை தவிர இந்த பதிவுலகில் யாருமே எழுதவில்லை ..,நான் மிகை படுத்தி சொல்கிறேன் என்று சொன்னால் http://pattapatti.blogspot.com/2010/06/blog-post_18.html பதிவையும் , http://pattapatti.blogspot.com/2010/07/blog-post.html பதிவையும் படித்து பாருங்கள் ..,

அடுத்து நம்ம ஹி ஹி ஹி மங்குனி ..,சும்மா சொல்ல கூடாது இந்த மனுஷன் கண்டு பிடிச்ச முஸ்கி ,குஸ்கி ,கிஸ்கி ,டுஸ்கி எல்லாம் பதிவுலகத்தில் சூப்பர் ஹிட் ...அதுவும் அந்த ப்ளோக ஓபன் பண்ண உடனே புலிகேசி (வடிவேலு ) ஸ்டில பார்த்தாலே தன்னால சிரிப்பு வந்துடும் ...அதுவும் அந்த கமெண்ட்ஸ் பாக்ஸ் ல இருக்கும் வடிவேலு படத்துக்கும் அது சொல்ற பதிலுக்கும் சூப்பரா மேட்ச் ஆகும் ...இதுக்காகவே அதை ஓட்டணும் போல இருக்கும்..அதுனால தான் அது ப்ளோக்ல என்னுடைய கமெண்ட் அதிகமா இருக்கும் ...அதுவும் மங்குனி சொன்ன ஒரு கமெண்ட்(வெளியுரு பதிவுல ) நினைச்சு நினைச்சு சிரிப்பேன் இப்பொழுதும் ...அது "" பட்டா பட்டியை ANONYMOUS ஆக்கின பெருமை உன்னையே சேரட்டும் வெளியுரு "".


பதிவு எழுத ஆரம்பித்தவுடன் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் எல்லோருமே g -talk வழியாகத்தான் ...நம் ,ஜெய்,அருண் பிரசாத் ,டெர்ரர் பாண்டி ..போன்றவர்கள் இந்த மாதிரி ஆட்களால்தான் மனதின் இறுக்கமும் ,வாழ்கையின் பிரச்சனைகளும் மறந்து சில மணி நேரங்கள் சந்தோஷமாக இருக்க முடிகிறது .இவர்கள் ஊருக்கு வந்தால் ஒரு போன் செய்யாமல் போக மாட்டார்கள் என்பது என் எண்ணம் .

டிஸ்கி : மன்குனிக்கு ஒரு எதிர் பதிவு எழுதி ஒன்னு draftla இருக்கு...தற்காலிகமா அதை நிறுத்தி வைத்துள்ளேன் ..,இதில் ஏதேனும் குறை இருந்தால் தயவு செய்து அதை கண்டும் காணாமல் வோட்டு போட்டு பின்னோட்டங்கள் இடுங்கள் ராசா ..,

டிஸ்கி 2 : இந்த இந்த னு லிங்க் குடுபீங்கலே எப்படியா அது ..,ஒரு மெயில் விடவும்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சாதி வாரி கணக்கெடுப்பு -மத்திய அரசு

முஸ்கி : இது என்னக்கு ஆறு மாதத்துக்கு முந்தி வந்த ஒரு S M S,,அதை இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாத்தியுள்ளேன் ...,



நம்ம மன்மோகன் சிங்க் அமெரிக்கா போறாரு ..அங்கே இரு நாட்டு நல்லுறவே பேணிகாப்பதற்காக ஒபாமா உடன் பேச்சு நடத்துறாரு ..அப்போ நடந்த சம்பாஷனைகள் இதோ .....

ஒபாமா : Mr .சிங்க் எப்படி இருக்கீர்கள் ...,உங்கள் நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்குது !!!!!!!

சிங்க் : ஹி ஹி ஹி ...தாங்க்ஸ் ஒபாமா ..இப்போ கூட நாங்கள் விண்வெளிக்கும் ,நிலவுக்கும் ஆட்களை அனுப்ப போறோம்

ஒபாமா : அப்படியா வெரி குட் ! வெரி குட்!!!! ....,உங்களுக்கு எதுனா உதவி தேவைன்னா மறக்காம என்கிட்ட கேளுங்க அமெரிக்க செய்யும்

சிங்க் : ஹி ஹி ஹி .... தாங்க்ஸ் ..

ஒபாமா : ஆமா ..எத்தனை பேரை நிலவுக்கு அனுப்பபோறீங்க?

சிங்க் : OC : 07 , OBC : 2 , SC : 2 ,ST :2

ஒபாமா : தக்காளி இவனுங்க திருந்த மாட்டனுங்க !!!



புதன், 11 ஆகஸ்ட், 2010

சில மனிதர்கள் எனும் மிருகங்கள்

சில வருடங்களுக்கு முன் நான் கிண்டியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன் .அங்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே என்னக்கும் எங்கள் மானஜெருக்கும் ஒரே லடாய் தான்.அவர் என்ன சொன்னாலும் அதன்படி தான் செய்ய வேண்டும் ..சிறிது மாற்றி செய்தாலும் போச்சு ..உன்னோட அனுபவம் என் வயது என்று சொல்லி திட்டுவார் ...,நான் எப்பொழுதுமே எங்கு சென்றாலும் ஒரு வேலையை கற்று கொண்டு,பின் என்வழியில் அதை சுலபமாக மாற்றி கொள்வேன் ..அதை மற்றவர்களுக்கும் சொல்லிகுடுபேன் ...,இது அவர்க்கு தெரிந்து CONTROL PLAN ல என்ன சொல்லியிருக்கோ அதன் படி செய் ...,என்னடா இது பெரிய லொள்ளா இருக்கே சொந்தமா சிந்திக்கவே விட மாற்றங்களே என்று நொந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தேன் .

ஒரு நாள் காலை மேனேஜர் குபிட்டு ..அடுத்த மாசம் ஆடிட் வராங்க ..PROCESS டாகுமென்ட் எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும் ..டாகுமென்ட் எல்லாம் PREPARE பண்ணனும் என்று ஒரு மூணு பேரை நியமித்தார் ...,சரி இனிமே இந்த ஆளு தொல்லை இருக்காதுன்னு ..ரொம்ப SINCEIRA வேலை பார்த்தேன் ..நான் வேலை பார்ப்பதை பார்த்து எனக்கு INCENTIVE எல்லாம் அந்த மூதேவி குடுத்தது....காலைல ஆறு மணிக்கு போவேன் ..இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன் ..தூக்கம் வெறும் ஏழு மணி நேரம்தான் ...இது மாதிரி ஒரு மாதம் ரொம்ப SINCERA வேலை பார்த்தேன் ...

ஆடிட்கு ஒரு நாள் முன் என்னுடுய வேலையெல்லாம் பக்காவாக முடித்து பஸ் ஸ்டாண்டில் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒருவர் ,'''சார் உங்க டீமில் வேலை பார்த்த ஒருவர் செய்த அத்தனை வேலைகளையும் யாரோ COMPUETERIL DELETE செய்து விட்டார்கள்.அவர் ஒ வென்று அழுகிறார்கள் போய் பாருங்கள் என்று சொன்னார் ''..என்னடா இது தலை வலியா போச்சேன்னு பார்த்தா ஒரு பெண் ஊழியர் அழுது கொண்டின்ருந்தார் ...,என்னக்கு பகீரென்று வந்தது ..ஏனென்றால் அவர் செய்த வேலையெல்லாம் ஒரு நாள்ள செய்ய முடியாது ..அந்த மூதேவி(மேனேஜர் ) என்னதான் திட்டும் ..என்னடா பண்றதுன்னு பார்த்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுபிச்சு BACK UP எதுனா இருக்கா பார்க்கலாம் என்றால் ....,DELETE பண்ணவன் தவம் மாதிரி அதை செய்திருக்கான்...இரவு பத்து மணிக்கு மனஜேருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி அவன் கிட்ட திட்ட வாங்கி ,ஒரு பீர உட்டு வீட்டுக்கு வந்தேன் ...,மறுநாள் ஆடிட்,நான் ஆடிட் வந்தவங்கள பார்த்ததும் நான் கவலையே படலை ..ஏனென்றால் அந்த ஆடிட் டீம் ஹெட் என் CLOSE FREIND ...,அவன் கிட்டே விஷயத்தை சொல்லி விடேன் .அவன் பரவாயில்லை விடு நான் பார்த்துகிறேன் என்று சொல்லி,'''02 NON CONFIRMATION REPORT ''' மட்டும் குடுத்துட்டு போய்ட்டான்.எல்லாருக்கும் சந்தோசம் ,புதுசா CERTIFICATE வாங்கியிருக்கிறோம் என்று ..,ஒரு சில தொழிலாளிகள் மட்டுமே எங்கள் டீமை வாழ்த்தினார்கள் ..,MANAGEMENT ஹ்ம்ம்ம் ..,

அதுக்கபுறம்தான் என்னக்கு ஆப்பு வெய்சாங்க ...,என்னோட ஒவ்வொரு நகர்வுகளை கண்காணித்தான் அந்த மேனேஜர் ..நான் எங்கே போனாலும் வந்து வேவு பார்கிறது அப்புறம் என்னோட சிஸ்டம் ஆராய்ச்சி பண்ணுவது என்று ..சரி சரி நம்மக்கு UPRAISAL போடத்தான் இதெல்லாம் என்று நினைத்துவிட்டேன் ..,
ஒரு நாள் காலை வேளைக்கு வந்ததும் எங்க மேனேஜர் '''உன் வேலை எதுவும் சரில்லை ,நீ இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னார் '''...ஆத்திரம் தாங்கவில்லை...ஏனென்றால் என்னக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்கள் காது பட சொல்லிவிட்டான் ...,நான் நேராக அங்கேயிருந்து கிளம்பி ஒரு தம்மை பத்த வைத்து கொண்டு என் நண்பனுக்கு போன் செய்து என்னுடைய சாப்பாடு மூட்டை எடுத்து வரசொல்லிவிட்டேன் ..அவன் வந்து குடுத்ததும் அவனிடம் RESIGN லெட்டர் கொடுத்து அந்த மூதேவியிடம் குடுத்து விடும் படி சொல்லி கிளம்பி விட்டேன்...,ஒரு ரெண்டு மாதாம் தண்ட சோறு சாப்பிட்டு விட்டு வேறு வேளைக்கு சேர்ந்தும் விட்டேன் ,,,,

ஒரு நாள் கோயம்பேடில் பஸ் ஸ்டாண்டில் எங்கள் ஆடிட் டீமில் இருந்த ஒரு நண்பனை சந்திதேன்...அப்பொழுது அவனிடம் பேசி கொண்டிருக்கும் போது சொன்னான் ....,அந்த ஆடிட் FILES எல்லாம் நான் தான் DELETE பண்ணினேன் என்று கொஞ்சமும் குற்றஉணர்ச்சி இல்லாமல் சொன்னான் ...ஏன் செய்தாய் என்று கேட்க வில்லை ....,மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று நினைதேன் ...அந்த பெண் எப்படி எல்லாம் மன உளைச்சல் பட்டிருக்கும் என்று எண்ணி ,உன் சங்காத்தமே வேண்டாமென்று அடுத்த நொடி கிடைத்த எதோ ஒரு பஸ்சில் ஏறினேன் ..

டிஸ்கி : அந்த கம்பெனி யின் வேலையே அதுதான் CERTIFICATE RENEW பண்ணும் போது ஆட்களை தேர்வு செய்து அவர்களிடம் நன்றாக வேலையை வாங்கி அது முடிந்ததும் வேலையை விட்டு எதாவது காரணம் சொல்லி தூக்கி விடுவார்கள்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

கார்ல் மார்க்ஸ் & இந்திய தொழிலாளர்களும்


காரல்மார்க்ஸ்
ஆம் சென்ற நூற்றாண்டில் மானிட சமுதயாதுக்காகவே வாழ்ந்த மகான் ...மனிதர்களுடைய உரிமைகளை பற்றி அறிவுறுத்திய தலைவன்; ,அவனுடைய சித்தாந்தங்கள் எல்லாம் மற்றவருடைய உழைப்பை திருடும் கனவானன்களுக்கு ஒரு சாட்டையடி ,மக்களுக்கோ அவன் ஒரு தீர்க்கதரிசி;அவன் மூச்சு நின்று பல வருஷங்கள் ஆயிற்று ,ஆனால் மார்கியசத்தை பற்றிய பேச்சு இன்று பாராளுமன்றங்களில் ,தொழிற்சாலைகளில் நாளாக நாளாக வலுக்கிறது;மார்க்ஸ் ஒன்றும் அழகான வாலிபனில்லை ;புறத்தூய்மை என்பது அவனிடத்தில் எப்போதுமே காணமுடியாது ஆனால் அகத்தூய்மை அனைவரையும் அவனிடம் இழுத்தது;அரசாங்களுக்கு அவன் அஞ்சவில்லை ,ஆனால் மனசாட்சிக்கு அஞ்சினான் ;ஏழைகளை சுரண்டுவதற்கு பயன்படும் கடவுள் ,சட்டம் ,அதிகாரம் போன்றவற்றை
வெறுத்தான்;அவன் வகுத்த சமதர்மம் மானிட சமுதாயத்தின் மேல் அவன் கொண்டிருந்த அன்பை காட்டுகிறது;
''இன்றைய அரசாங்கம் என்பது முதாளிகளுக்கு தேவையானவை பற்றி நிர்வாகம் செய்வதற்கு ஏற்படுத்தின கமிட்டி ''என்று சொன்னான் ; இது தான் இன்று தண்டகரான்யத்தில் இந்திய அதிகார வர்க்கம் பேயாட்டம் ஆடிகொண்டிருகிறது;அவன் தீர்கதரிசி .
இந்திய அதிகார வர்க்கம் வெறுத்தாலும் ,இன்றைய சூழ் நிலையில் அவனுடைய சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன .ஸ்ரீ பெரும்புதுரிலும் ,மறைமலைனகரிலும் உள்ள பன்னாட்டு கம்பனிகளில் தொழிலாளர்கள் படும் வேதனை சொல்லி மாளாது ,ஒரு மாதம் சம்பளம் 4000 ருபாய் ..ஆனால் அந்த சம்பளத்தில் அவனால் ஒரு மாதத்திற்குஉற்பத்தி செய்யப்படும் விலை பல லட்சம் ..இங்கே தான் சுரண்டபடுகிறான் தொழிலாளி ...,அவனுக்கு போனஸ் ,வீடு வாடகை ,பஞ்ச படி ,பயண படி போன்ற எதுவமே தரப்பட மாட்டாது..ஏனென்றால் அவனை பழகுனர் என்று முதலாளி வர்க்கம் ஒதுக்குகின்றது ,தொழிற் பழகுனரை வைத்து உற்பத்தி செய்ய கூடாது என்று தொழிலாளர் நல சட்டம் சொல்கிறது ..ஆனால் அது காற்றில் எழுதப்பட்ட சட்டமாகவே கம்பனிகளால் பார்க்க படுகின்றது ..இன்று எத்தனை தொழிலாளி தான் சுரண்டபடுவதை தெரியாமல் இருக்கிறான் ,ஒரு செங்கொடியை கூட நம்மால் நம் பிறந்த மண்ணில் கட்டப்பட்ட கம்பனிகளில் ஏற்ற முடியவில்லை அப்புறம் ஏன் COMMUNISM ,தொழிலாளர் அடக்குமுறை போன்ற வாசங்களை வைத்து பிழைப்பு நடத்துகின்றோம் ..வெட்கமாக இருக்கின்றது ..ஒரு சக தொழிலாளி பாதிக்க படுவதை நின்று நிதானமாக பார்த்து கொண்டிருக்கிறோம் ..
நான் கிட்டதட்ட நான்கு வருடம் பழகுனரகவே வேலை பார்த்து கொண்டிருந்தேன் ..,நான் செய்யும் உற்பத்தி கிட்ட தட்ட பல லட்சங்களை தாண்டும் ..,இதை பற்றி கேள்வி கேட்ட நான் பணியிலுருந்து தூக்கி எறியப்பட்டேன் ...,இந்திய வல்லரசாகும் என்று கனவு கொண்டிருபவர்களே ஒருவனின் உண்மையான உழைப்புக்கு வர வேண்டிய சம்பளத்தை பெற்று தந்து வல்லரசு கோஷங்களை போடுங்கள் ..ஒரு சாரார் மட்டுமே வளம்கொழித்து வரப்போகும் வல்லரசு பட்டம் சுரண்டப்பட்ட உழைப்பாளிக்கு கொடுக்கும் அமரர் பட்டம் என்று நினைவில் கொள்க